News September 15, 2025
வேலூரில் பசு மாட்டிற்கு சீமந்தம்

வேலூர் மாவட்டம், சாத்துமதுரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர், 9 மாத சினையாக உள்ள பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளார். பசுவுக்கு பட்டுப்புடவை அணிவித்து, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரித்தனர். இந்த விழாவில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த விருந்தினர்களுக்கு ஐந்து விதமான கலவை சாதங்களும், விருந்தும் பரிமாறப்பட்டது.
Similar News
News September 15, 2025
வேலூர்: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
News September 15, 2025
வேலூர்: ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, கெம்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் விக்னேஷ், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 15, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (செப்டம்பர் 15) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.