News December 20, 2024
வேலூரில் நண்பரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வேலூர் கஸ்பாவைச் சேர்ந்தவர் ஜமீர் (29) பெயின்டர். தொரப்பாடியைச் சேர்ந்தவர் ஜூபேர் (27) பேக்கரி ஊழியரும் நண்பர்கள். கடந்த 2022ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி மது போதையில் ஜூபேரின் தலையில் கல்லை வீசி ஜமீர் கொலை செய்தார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஜமீருக்கு ஆயுள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
Similar News
News August 14, 2025
மகளிர் உரிமை தொகை பெற? இங்கு போங்க

வேலூரில் இன்று (ஆகஸ்ட்.14) வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.<
News August 14, 2025
வேலூர் மாவட்ட SP எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆக-13) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News August 13, 2025
வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)