News February 10, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய மாணவன் !

image

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த நர்சிங் மாணவர் அரவிந்த் (22). இவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல நாட்களாக சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று (பிப்.9) அரவிந்த் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

வேலூரில் 250 கோழிகள் இலவசம்!

image

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

வேலூரில் EB பில் எகிறுதா..?

image

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்; எஸ்.பி ஆய்வு

image

வேலூரில் தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் நேற்று (பிப்.17) கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டாா். சேலத்தைத் தொடா்ந்து, தற்போது வேலூரின் அகரம்சேரியில் தவெக தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது பெரும் எதிர்பார்ப்பதை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!