News May 7, 2025

வேலூரில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக மதுவிற்பனை செய்தால் போலீசில் புகாரளித்து சட்டநடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலர் முன்னேற்பாடாக மதுபானங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அதிக லாபத்திற்காக விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து தெரிய வந்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 15, 2025

வேலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

வேலூர்: விபத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (24). இவர் நேற்றிரவு பேரணாம்பட்டு அருகே உள்ள நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் வந்துள்ளார். அப்போது பக்காலாபல்லி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News December 15, 2025

வேலூர்: 8 பவுன் நகை திருடிய 2 பெண்கள்!

image

விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(41). இவருடைய மணைவி இளையராணி(37) . கடந்த அக்டாபர் மாதம் சக்திவேலுக்கு விபத்து ஏற்பட்டு திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் 8 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த விசாரணையில், கீழ்தளத்தில் குடியிருக்கும் லட்சுமி, அஞ்சலி ஆகியோர் தங்களது கணவர்கள் உதவியுடன் திருடியது தெரியவந்தது.

error: Content is protected !!