News January 3, 2026

வேலூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

image

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் பஸ் டிரைவர்களுக்கும், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 1, 2026

வேலூர் தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

வேலூர் போலீசின் அதிரடி வேட்டை – 4 பேர் கைது!

image

பேரணாம்பட்டு பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு நேற்று (ஜனவரி.31) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு (ரகுராம் 44) அருண்குமார் (33), கலைஞர் (56), கோவிந்தராஜ் (40), ஆகிய 4 பேரும் வீடுகளில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News February 1, 2026

வேலூரை உலுக்கிய கோர சம்பவம்!

image

குடியாத்தம் எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரிவித்தா(20), 3ம் ஆண்டு தேர்வு முடிவில் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகளை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தார். பின், தாலுகா போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!