News February 28, 2026

வேலூரில் கோரா தீ விபத்து!

image

வேலூர் அடுத்த ஓட்டேரி ஏரி அருகே பாலமதி மற்றும் நாயக்கனேரி செல்லும் ஊர்களுக்கு இடையே மலை உள்ளது. இந்த மலைக்கு நேற்றிரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அந்த தீ மளமள என்று பரவியது. இதனால் மலையில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது. மலைக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 2, 2026

வேலூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

வேலூரில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

News March 2, 2026

வேலூரில் அதிரடி கைது!

image

ஆந்திர மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிகொண்டா பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. விசாரித்ததில் குடியாத்தத்தை சேர்ந்த பாஷா என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 31 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!