News February 16, 2026
வேலூரில் இன்று டாஸ்மாக் அடைப்பு!

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப்.16) மயானக் கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் வீதியுலா நடைபெறும். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், 16 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News February 17, 2026
வேலூரில் தறிகெட்டு ஓடி மரத்தில் சொருகிய ஆட்டோ!

வள்ளிமலை அருகே கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் நேற்று புதிதாக ஆட்டோவை வேலூரில் உள்ள ஷோரூமில் வாங்கியுள்ளார். பின்னர் வேலூரில் இருந்து கொக்கேரிக்கு ஆட்டோவை குமரேசன் ஓட்டிச் சென்றார். மாலை சுமார் 6 மணி அளவில் சைனாம்பட்டறை பகுதியில் வேகமாக வைத்த ஆட்டோ திடீரென நிலை தடுமாறி பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமரேசன் படுகாயம் அடைந்தார். இதில் புதிய ஆட்டோ நசுங்கி சுக்கு நூறானது.
News February 17, 2026
வேலூரில் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்த முதியவர்!

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (73), இவர் பிப்ரவரி 15-ம் தேதி மாலை சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய பஞ்சாயத்து அருகே அலுவலகம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஜெயக்குமார் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் முதியவர் பலியானார். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 17, 2026
வேலூர்: இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (பிப்.16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


