News October 14, 2025

வேலூரில் இன்று கரண்ட் கட்?

image

வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த சாத்துமதுரை, கீழ் பள்ளிப்பட்டு ஆகிய துணை மின் நிலைங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (அக் .14) மேற்கொள்ளப்பட்ட இருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

வேலூர்: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. BE பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <>விண்ணப்பிக்க<<>> அக்.18 கடைசி தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

வேலூர்: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை தெங்கால் பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரியான விநாயகம் (54) என்பவர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மூதாட்டி நேற்று பொன்னை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விநாயகத்தை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News October 14, 2025

பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (அக் 13) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்பி மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஆணையாளர் லட்சுமணன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!