News February 4, 2026
வேலூரில் இந்த பகுதிகளுக்கு மின் தடை!

வேலூரில் உள்ள திருவலம், கர்ணாம்பட்டு, சத்துவாச்சாரி, வடுகந்தாங்கல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்து உள்ளது. எனவே பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த படுகின்றனர்.
Similar News
News February 5, 2026
வேலூர்: “அம்மா நான் சாக போறேன்…” மாணவன் தற்கொலை!

ரெட்டியார்பல்லியை சேர்ந்த ஜீவநேசன், குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் யோகநேசன் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் யோகநேசன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் “படி படியென தொடர்ந்து வற்புறுத்துவதால்” தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தது. இதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 5, 2026
வேலூர்: 7 மாத குழந்தை திடீர் சாவு; கதறும் பெற்றோர்!

கீழ்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தம்பதி பிரசாந்த் (32), மோகனா.இவர்களது 7 மாத பெண் குழந்தை மிதுலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.4) காலை குழந்தைக்கு பாலூட்டுவதற்காக மோகனா தூக்கியபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது.
News February 5, 2026
வேலூரில் துடிதுடித்து பலி!

பரதராமி பகுதியைச் சேர்ந்த ஈஷாக் (35). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று (பிப்.4) பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் டி.பி.பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. அதில் ஆட்டோ டிரைவர் ஈஷாக் உயிரிழந்தார, மேலும் 2 பயணிகளை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதுகுறித்து பரதராமி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


