News March 21, 2024

வேலூரில் அதிவேகமாக சென்ற 15 பைக்குகள் பறிமுதல்

image

வேலூரில் அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகள் செல்வதாக எஸ்.பி மணிவண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் இன்று (மார்ச்.21) வேலூர் மக்கான் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளருக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Similar News

News November 4, 2025

வேலூர்: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. வேலூரில் மட்டும் 26 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

image

பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.03) விருபாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஆந்திர சேர்ந்த சிட்டிபாபு (52), பாலகுமார் (55), சரவணன் (54) மற்றும் வெட்டுவாணத்தைச் சேர்ந்த வேல்முருகன் (52), கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரை போலீசார் வழக்கின் பெயரில் கைது செய்தனர்.

News November 4, 2025

வேலூரில் ரூ.414 கோடி நலத்திட்ட உதவிகள்!

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.04) வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!