News March 21, 2024
வேலூரில் அதிவேகமாக சென்ற 15 பைக்குகள் பறிமுதல்

வேலூரில் அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகள் செல்வதாக எஸ்.பி மணிவண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் இன்று (மார்ச்.21) வேலூர் மக்கான் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளருக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
Similar News
News January 26, 2026
வேலூரில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து!

வேலூர் அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் முபாரக் (26). இவர் தனது நண்பர் வசந்த்துடன் நேற்றிரவு பாகாயத்திற்கு வந்தனர். அங்கு நின்றிருந்த ஒருவரிடம் முபாரக் தனது நண்பர் குறித்து விசாரித்து அவருடன் நண்பரை பார்க்க நம்பிராஜபுரம் மலையடிவாரம் சென்றார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் கத்தியை எடுத்து முபாரக்கை வெட்டினார். இதுகுறித்து பாகாயம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News January 26, 2026
வேலூர்: ஊருக்கு வந்த வீரர் உயிரை விட்ட சோகம்!

பள்ளிகொண்டா, வேப்பங்கால் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் எழிலரசன் (35) இவர் சில நாட்களுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.24) இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உழவு செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று ஜன.25 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


