News January 26, 2026

வேலூரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

image

வேலூர் மாநகராட்சியினர் நேற்று (ஜன.25) நகரின் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் மொத்தம் ரூ.27,600 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News January 30, 2026

வேலூரில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

வேலூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். உடனே SHARE பண்ணுங்க.

News January 30, 2026

வேலூர் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ்

image

வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு மாதாந்திர வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உத்தரவிட்டார். அதன்படி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகையில் உள்ள 60 கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!