News October 28, 2024
வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் யானை

வேப்பனப்பள்ளிக்கு அடுத்த மகராஜகடை வனப்பகுதியில் இருந்து 3 நாட்களாக ஒரு யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை தமிழக எல்லையில் உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே, இரவு நேரங்களில் நடமாடும் யானைகளால் விவசாயிகள், பொதுமக்கள் விவசாய நிலத்தில் தங்க வேண்டாம். வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News August 25, 2025
வேகமெடுக்கும் ஓசூர் விமான நிலைய திட்டம்

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. பெரிகை–பாகலூர் இடையே தேர்வு செய்யப்பட்ட இந்த தளம் TAAL ஓடுபாதையிலிருந்து 15.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் மாநில அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி அனுமதி கோர உள்ளது. இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தல் முன்மொழிவை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
News August 24, 2025
கிருஷ்ணகிரி: உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 TECHNICIAN காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th முடித்த 18-28 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 24, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.