News March 9, 2025
வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்புதுப்பட்டு கிராமத்தில் இன்று காலை(மார்ச்.09) 20 பேர் பயணம் செய்த வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேர் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காயம் அடைந்த ஐந்து பேர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
விழுப்புரம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

விழுப்புரம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News September 10, 2025
பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி எம்எல்ஏ மீது 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடந்து வரும் நிலையில் நேற்றுஓய்வு பெற்ற டிஎஸ்பிவிஜயராகவன் சாட்சியம்அளித்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு