News March 19, 2024
வேனில் 405 சேலைகள் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று(மார்ச்.18) திருச்செந்தூர் ஆலந்தலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 405 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 4, 2026
தூத்துக்குடியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE செய்யவும்.
News February 4, 2026
தூத்துக்குடி: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் (19) தனது நண்பருடன் பைக்கில் நேற்று (பிப்.3) புதுக்கோட்டை சென்றுள்ளார். அப்போது மங்களகிரி விலக்கு அருகே தனியார் பள்ளி பேருந்தில் உரசியதில் நிலை தடுமாறி நடந்து சென்ற காட்வின் என்பவர் மீது பைக் மோதியது. இதில் தாடிக்காரன் படுகாயமடைந்து உயிரிழந்தார். காட்வின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை போலீசார் விசாரணை.
News February 4, 2026
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் நெல்லை பேட்டையை சேர்ந்த கூடலிங்கம் (27), சுத்தமல்லியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை செய்ததன் பெயரில் கலெக்டர் இளம்பகவத் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.


