News March 25, 2024

வேட்புமனுவை தாக்கல் செய்த பா.ம.க  வேட்பாளர்

image

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் பா.ம.க வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அன்புமணி ராமதாஸ் எம்பி மற்றும் பென்னாகரம் எம்எல்ஏ, ஜி. கே.மணி. பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர் அமமூக மாவட்ட பிரதிநிதி உடனிருந்தனர்.

Similar News

News February 11, 2026

தருமபுரியில் மின் தடை; உங்க ஏரிய இருக்கா?

image

ராமியனஹள்ளி மற்றும் மாம்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (பிப்.12) மாதாந்திர பணி நடைபெற உள்ளதால் காலை 9 – 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி மற்றும் அனுமன்தீர்த்தம்,கைலாயபுரம்,காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு கீழ்மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளி மின் தடை ஏற்படும்.

News February 11, 2026

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

image

எஸ்.வி. சாலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயில் பூசாரி ரமேஷ் பாபு (56). இவர் தனது வீட்டில் வேலை செய்த 9-ம் வகுப்பு மாணவியுடன் 3 மாதங்களாக தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலியால் துடித்த மாணவியை அரசு மருத்துவர்கள் பரிசோதித்ததில் 2 மாத சிசு வயிற்றிலேயே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

News February 11, 2026

தருமபுரி: தூக்கில் தொங்கிய விவசாயி!

image

கிருஷ்ணாபுரம் அடுத்த ரங்கன் கொட்டாய்யை சேர்ந்த விவசாயி சஞ்சீவன் (34). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சஞ்சீவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!