News March 28, 2024
வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
Similar News
News October 29, 2025
செங்கல்பட்டு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது

வண்டலுார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான பள்ளி மாணவி ஒருவர், பள்ளி வேனில் செல்வது வழக்கம். இவர் பள்ளி வேனை தவற விடும் போது, வழக்கமான ஆட்டோ ஒன்றில் பள்ளிக்குச் செல்வார். அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம், மாணவி ஆட்டோவில் சென்ற போது, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம், 42, ஆட்டோ டிரைவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரை, போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
News October 29, 2025
செங்கல்பட்டு: மர்ம காய்ச்சல் 1 வயது குழந்தை பலி

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர்- சுகன்யா தம்பதி. இவர்களின் 1 வயது மகள் அனன்யாவிற்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. பெற்றோர் அருகில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்தபோது, காய்ச்சல் சரியானது. திடீரென குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


