News September 3, 2025
வேட்டைக்காரனிருப்பு -உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கீழையூர் ஒன்றியம், வேட்டைக்காரனிருப்பு புயல் பாதுகாப்பு சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமை கீழையூர் வட்டார ஆத்மா திட்ட கமிட்டி தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார்.
இதில் வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Similar News
News December 11, 2025
நாகை: சரக்கு வாகனம் மோதி பரிதாப பலி

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்தவர் அலிஷேக் மன்சூர் (60). இவர் நேற்று தனது டூவீலரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திட்டச்சேரி அடுத்த குருவாடி அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் அலிஷேக் மன்சூரின் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 11, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக மற்றும் வகுப்பு நல்லிணத்திற்காக தங்களை அர்ப்பணித்து செயலாற்றிய நபர்கள் 2026-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை அறிய http://awards.tn.gov.in என்ற இணையதளத்தை அணுக அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 11, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!


