News March 21, 2024
வேடசந்தூர்: மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

வடமதுரை இபி காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (64)., மனைவி கஸ்தூரிபாய் கொடைக்கானலில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்று காலை துர்நாற்றம் வீசியதால் அருகில் வசிப்பவர் வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த ராதாகிருஷ்ண உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 4, 2025
திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம் பெறுகின்றன. சமூக ஊடக அட்டைகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன் வெளியிட்டார். தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களிடம் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் போன்ற பணிகளில் முழு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
News November 3, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News November 3, 2025
திண்டுக்கலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக தளங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. முன் செல்லும் வாகனத்துக்கு குறைந்தது 10 மீட்டர் இடைவெளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நினைவூட்டப்பட்டனர். பாதுகாப்பு இடைவெளி உயிரைக் காப்பதாகும் என்பதால், ஊரகப் பகுதிகள் முதல் நகரப்பகுதிகள் வரை மக்கள் விதிகளை விழிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று சமூக பயனாளர்கள் வலியுறுத்தினர்.


