News January 24, 2025

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்புள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News February 25, 2026

புதுகை: விமான பாதுகாப்பு பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை, கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 முதல் 35 வயதுக்குள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான <>www.tahdco.com<<>> விண்ணப்பிக்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 25, 2026

புதுக்கோட்டை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவு

News February 25, 2026

புதுக்கோட்டை: வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வருகிற பிப்.28 மன்னர் கல்லூரி வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் நேரில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார். இந்த நல்வாய்ப்பினை அனைவருக்கும் தெரிய SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!