News February 16, 2026
வெள்ளியங்கிரி மலை பற்றி தெரியுமா?

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோயிலில் சிவபெருமான் பஞ்ச லிங்க வடிவில் ஏழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த குகை சுமார் 6 அடி அகலம் கொண்டது. சுயம்பு லிங்கமாக அவதரித்த காரணத்தினால் இங்கு சிவபெருமானுக்கு “சுயம்புமூர்த்தி” என்றொரு பெயரும் உண்டு. மேலும், அங்கு 5-வது மலையில் காணப்படும் மணல் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இம்மலையை திருநீர் மலை (எ) புனித சாம்பல் மலை என அழைக்கப்படுகிறது.
Similar News
News February 19, 2026
கோவை பீளமேடு அருகே பயங்கரம்!

கோவை தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்த சென்னிமலையைச் சேர்ந்த கோவர்தன மணி பாரதி (18) நேற்று பைக் விபத்தில் உயிரிழந்தார். பீளமேடு அருகே அவர் சென்றபோது, ஆம்னி பேருந்து உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் சக்கரம் அவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 19, 2026
கோவையில் தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி

கோவை மாநகரில் வசிக்கும் தொழிலதிபர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நோட்டமிடும் மும்பையை மர்ம கும்பல் அவர்களுக்கு போன் செய்து உங்களது ஆதார் கார்டு எண்ணை வைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்ண்டு வருகின்றனர்.
News February 19, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


