News December 4, 2024
வெள்ளம் பாதித்த 151 இடங்களில் தூய்மை பணி

கடலூரில் வெள்ளம் பாதித்த 16 ஊராட்சிகளை சேர்ந்த 66 உட்கடை கிராமங்கள், அண்ணாகிராமத்தில் 17 ஊராட்சிகளை சேர்ந்த 57 உட்கடை கிராமங்கள், பண்ருட்டியில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 28 உட்கடை கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சேர்ந்த 151 இடங்களில் 2,045 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 361 கிலோ பிளிச்சங் பவுடர் தெளித்து தூய்மை பணி நடந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 29, 2025
கடலூர்: 161 பேருக்கு ரூ.2.57 கோடி தீருதவித்தொகை

கடலூர் மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்களில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சிக்கு அனுப்பிய அறிக்கையின் மூலம் கடந்த ஆண்டு 106 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 91 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 161 பேருக்கு ரூ.2.57 கோடி தீருதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15 நபர்களுக்கான தொகை வழங்க உள்ளன என்று மனித உரிமை போலீசார் தெரிவித்துள்ளனர்.
News December 29, 2025
கடலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 29, 2025
கடலூர்: ஆட்சியரிடம் 685 மனுக்கள் அளித்த பொதுமக்கள்

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 685 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


