News May 31, 2024
வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய ஒரு அறிய வாய்ப்பு

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய விரும்பும் திருச்சியை சேர்ந்த தகுதி, விருப்பம் உள்ள செவிலியருக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர, தமிழ்நாடு அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்,வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
திருச்சி: திட்ட முகாமில் 1872 மனுக்கள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்.10) பல்வேறு இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மொத்தம் 1872 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் நாளை (செப்.11) புள்ளம்பாடி, மணிகண்டம், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் திட்ட முகாம் நடைபெறும். இதில் பொது மக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் செப்.,13-ம் தேதி திருச்சி மரக்கடை காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டு திருச்சி கோட்டை காவல் துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கோட்டைக்காவல் துணை ஆணையரிடம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
News September 10, 2025
திருச்சி: கட்டணமில்லா வக்கீல் வேண்டுமா?

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 00431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️ இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.