News December 13, 2025
வெற்றி பெற்றார் கேரளாவின் முதல் பெண் IPS அதிகாரி

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி, 45 ஆண்டுகால CPM – LDF கூட்டணி தொடர் வெற்றிக்கு முடிவு கட்டி, திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக<<>> கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்ட BJP வேட்பாளரும், கேரளாவின் முதல் IPS அதிகாரியுமான ஸ்ரீலேகா, CPM வேட்பாளர் அம்ரிதாவை 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார். இவரே திருவனந்தபுரம் மேயராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.
Similar News
News December 15, 2025
பல்லியின் வால் எத்தனை முறை மீண்டும் வளரும் தெரியுமா?

பல்லிகள் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்தி தான் ‘ஆட்டோடோமி’ செயல்முறை. அதாவது வாலை துண்டித்து கொள்ளும் முறை. அப்படி துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் முழுமையாக வளர்ந்து விடும். இதை ரீஜெனரேஷன் என்கிறது அறிவியல். பல்லிகள் எத்தனை முறை வாலை துண்டித்தாலும், அது வளரும். அதற்கு எண்ணிக்கை வரம்பு இல்லை என்றாலும், பல்லியின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
News December 15, 2025
ராயபுரம் மக்களை விட்டுப்போக மாட்டேன்: ஜெயகுமார்

எவ்வளவு அதிக சீட்டுகள் கேட்டாலும், பாஜகவுக்கு எத்தனை சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்பதை EPS தான் முடிவு செய்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதிக்கு மாறப்போவதாக வரும் தகவல்கள் வதந்தி என கூறிய அவர், ‘வெற்றியோ, தோல்வியோ… எந்த காலத்திலும் ராயபுரம் மக்களை விட்டுப்போக மாட்டேன்’ என்று குறிப்பிட்டார். 25 ஆண்டுகள் வெற்றியை தேடித்தந்தவர்கள் ராயபுரம் மக்கள் என்றும் அவர் கூறினார்.
News December 15, 2025
BREAKING: தங்கம் விலை ₹1 லட்சத்தை கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் 1 சவரன் ₹720 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹440 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹12,515-க்கும், 1 சவரன் ₹1,00,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


