News March 23, 2024
வெயிலின் தாக்கத்தால் நிழற்குடையில் பதுங்கும் பயணிகள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.23) வெயிலின் தாக்கத்தால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் நிழற்குடையின் கீழ் தஞ்சம் அடைகின்றனர். மேலும் மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நிழற்குடைகள் போதுமானாதாக இல்லை என பயணிகளிடையே குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
Similar News
News April 19, 2025
ரூ.88 லட்சம் மோசடி செய்த எம்.பி.ஏ இளைஞர்!

திண்டுக்கல்: ஒரு பெண்ணுக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த வத்தலக்குண்டைச் சேர்ந்த பட்டதாரி வாலிபரை போலீசார் நேற்று(ஏப்.18) கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில் அவர் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடி வந்ததாகவும், அந்த நேரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 18, 2025
களவு பொருளை கை சேர்க்கும் கருப்பர்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் களவு போன பொருள் மீண்டும் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும், பில்லி சூனியம் அகலும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News April 18, 2025
பழனி வாசவி மஹாலில் நாணய கண்காட்சி

பழனி வாசவி மஹால் தெற்குரதவீதி, நாணய கண்காட்சி காலை 9.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை ஏப்ரல் 18, 19, 20 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. பழைய நாணயம், அஞ்சல் தலை மற்றும் பணத்தாள் வரலாற்று சிறப்புமிக்க கல்வி கண்காட்சியில்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். அனுமதி இலவசம்