News February 22, 2025
வெம்பக்கோட்டை ஒரு விசித்திரக்கோட்டை தான்

கிழடியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் அவ்வப்போது கிடைக்கப் பெற்று வருகிறது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகிறது. அண்மையில், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டது கூடுதல் சிறப்பு.தொடர்ந்து தமிழர்களின் நாகரீகம் கண்டறியும் வெம்பக்கோட்டை ஒரு விசித்திரக்கோட்டை தான்.
Similar News
News October 30, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
சிவகாசி அருகே இளம்பெண்ணின் கையை வெட்டிய நபர் கைது

சிவகாசி அருகே ரிசர்வ்லையன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்-கவிதா (30)தம்பதி. கருத்து வேறுபாட்டால் கவிதாவை விட்டு முத்துக்குமார் பிரிந்து சென்றதால் சேகர்(33) என்பவருடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சேகர் குடித்துவிட்டு கவிதாவை தாக்கினார். இதனால் அவரிடம் பேசுவதை நிறுத்தியதால் கவிதாவை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் வெட்டினார்.
News October 30, 2025
விருதுநகர் அருகே பெண் சடலம் மீட்பு

நரிக்குடி அருகே சாலை இலுப்பைகுளம் பயணிகள் நிழற்குடைக்குள் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக கிடந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததாக தெரியவந்த நிலையில், உயிரிழந்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


