News December 21, 2025
வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில், சுவாமிக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் மாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு வெண்ணை காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News December 29, 2025
நாமக்கல்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த<
News December 29, 2025
நாமக்கல் அருகே சோகம்: தம்பதி விபரீத முடிவு!

நல்லுார் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி பச்சமுத்து(85), தங்கம்மாள்(82). இவர்கள் தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களது மகன் வெற்றிவேல், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மகன் இறப்புக்கு பின், உறவினர்கள் யாரும் இவர்களை பராமரிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது. நல்லார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 29, 2025
பரமத்தி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

ராசாம்பாளையம் டோல்கேட் பகுதியில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த துரைராசு என்பவர் லாரியை நிறுத்தி விட்டு, எதிரே உள்ள கடைக்கு தண்ணீர் கொண்டுவர சாலையை கடந்துள்ளார். அப்போது நாமக்கல் நோக்கி சென்ற பஸ், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை நாமக்கல் GHக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய சேலம் டிரைவர் சேகரை கைது செய்தனர்.


