News October 13, 2025
வெடிகுண்டு மிரட்டல்: திருச்சியில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சோதனை செய்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News October 13, 2025
திருச்சி: கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு

தில்லை நகரைச் சேர்ந்த சுதர்சன் நேற்று முன்தினம் திருவெறும்பூர் சென்று விட்டு தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி சிலைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விசாரித்த தில்லைநகர் போலீசார் நகைகள் திருடிய விஜயராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.
News October 13, 2025
திருச்சி: தேர்வு கிடையாது – அரசு வேலை!

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு <
News October 13, 2025
திருச்சி: நகராட்சி ஊழியர் மீது கத்தியால் தாக்குதல்

துவாக்குடியைச் சேர்ந்த குமார் என்பவர் நகராட்சியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று துவாக்குடி பகுதியில் தேநீர் அருந்த வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர் மதுபோதையில் குமாருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் குமாரை அவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் சாம்ராஜை நேற்று கைது செய்தனர்.