News December 17, 2025
வீட்டை கோயிலாக்கும் மார்கழி கோலங்கள்!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய தத்துவம், பச்சரிசி மாவில் போடும் கோலங்களால் உயிர்பெறுகிறது. எறும்புகளுக்கும், சிறு உயிர்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை மார்கழி மாதத்தில் பின்பற்றுவது கூடுதல் சிறப்பு. இதனால் வீட்டில் செல்வம், செழிப்பு பெருகும் என நம்பப்படுகிறது. அப்படியாக, மார்கழியில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.
Similar News
News December 20, 2025
சனிக்கிழமை விரதத்தால் கிடைக்கும் பலன்!

பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படும் சனிக்கிழமையில், விரதம் கடைபிடித்தால் நினைத்த காரியம் கைகூடும் என நம்பப்படுகிறது. பகலில் பழமும், நீர் மட்டும் அருந்தி, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இப்படி செய்தால் சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து, பெருமாள் நம்மை காப்பார் என்பது ஐதீகம்.
News December 20, 2025
பொங்கலுக்குள் கூட்டணியை இறுதி செய்ய NDA தீவிரம்

தஞ்சை (அ) மதுரையில் நடைபெறவுள்ள பாஜகவின் பொங்கல் விழாவில் NDA கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதன் வெளிப்பாடே பாஜக – அதிமுக முக்கிய தலைவர்கள் மாறி மாறி டெல்லி மேலிடத்தை சந்தித்து வருகின்றனர். NDA-வில் தற்போது அதிமுக, பாஜக, தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே உள்ளன. மேலும், பாமக, தேமுதிக, அமமுக, OPS அணியை விரைவாக கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
News December 20, 2025
அஜித் ரசிகர்களுக்கு நியூ இயரில் ட்ரீட்

ரேஸிங்கில் அஜித் பிஸியாக உள்ள நிலையில் அவரது படங்களுக்கு ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் ரீ-ரிலீஸான அட்டகாசம் படம் அவரது ரசிகர்களுக்கு சின்ன கொண்டாட்டத்தை கொடுத்தது. அதைவிட மாஸாக கொண்டாடும் வகையில் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. ஜன.23-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.


