News March 20, 2025
வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது – ராமதாஸ்

கிளியனூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது. முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு விலை நிலங்கள் பட்டாவாக மாற்றம் முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. ஏரி குளம் நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை கூறினார்.
Similar News
News March 22, 2025
குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அதில், ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. ஷேர் பண்ணுங்க.
News March 22, 2025
விழுப்புரத்தில் பிரபல ரவுடி கைது

விழுப்புரம் ஐஜேகே பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக, பிரபல ரவுடி கலையரசன் கைது செய்யப்பட்டார். சுவர் விளம்பரம் எழுதுவதில் ஐஜேகே நிர்வாகி ஆண்டனி ராஜ் என்பவருக்கும் கலையரசனுக்கும் பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆண்டனியை கத்தியால் கொலை செய்ய முற்பட்டபோது, விழுப்புரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கலையரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
News March 22, 2025
சாலையைக் கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி

சென்னை ஓட்டேரி பேங்க் தெருவைச் சோ்ந்தவர் ராமதிலகம் (54). இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மாமந்தூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.