News April 25, 2024

வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மாயம், தந்தை புகார்

image

கடவூர் தாலுகா ஒடுவம்பட்டி சேர்ந்தவர் பாபு மகள் ராகவி (18). இவர் நர்சிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாபு சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 10, 2026

கலை நிகழ்ச்சியில் கலக்கிய குளித்தலை மாணவர்கள்!

image

கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிருஷ்ணவேணி, ரம்யா, கீர்த்தனா, ரங்கராஜ், யுவராஜா ஆகியோர் திருச்சி தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போட்டிகளில் மவுன நாடகப் பிரிவில் மூன்றாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு பேராசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News January 10, 2026

கரூரில் பெண் உட்பட 4 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் மாயனூர், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, குளித்தலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற முருகன் (54), அம்மையப்பன் (29), மலர்கொடி (41), சண்முகம் (50) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 10, 2026

கரூர் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!