News November 16, 2024
வீட்டின் மேற்கூரை விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல், சீலப்பாடி அணைப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னதேவர் மகன் போஸ்(54) கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் திண்ணையில் கட்டிலில் படுத்திருந்தபோது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியானார்.இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவலர்கள் போஸ் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
திண்டுக்கல்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
பழனி கோயில் நேரத்தில் மாற்றம்!

மார்ச் 3-ஆம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நண்பகல் 1 மணி முதல் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் காலை 10:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கிரகணம் முடிந்து இரவு 7 மணிக்கு மேல் பரிகார பூஜைகள் மற்றும் தங்க ரதப் புறப்பாடு நடைபெறும். மறுநாள் மார்ச் 4 முதல் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
News March 1, 2026
திண்டுக்கல் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க


