News April 9, 2024

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் தசரத நகரில் தனியாக வசித்து வருபவர் சரஸ்வதி (72). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு தனது மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் இரவு மர்ம நபர்கள் மூதாட்டியின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே வீட்டின் பூட்டை உடைக்க முடியாத நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 6, 2026

ஆவடியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதியில் நில மோசடி மற்றும் பண மோசடி வழக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை நடைபெற்றது. இதில், போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டு 4 வழக்கில் தொடர்புடைய சுமார் 7 நபர்களும் மற்றும் பணமோசடி வழக்கில் 1 நபரையும் கைது செய்தனர்.

News February 6, 2026

திருவள்ளூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்னிகா(27), பெண் காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உடற்தகுதி தேர்வுக்காக வேப்பம்பட்டில் வசிக்கும் பெரியம்மா வீட்டில் தங்கி வந்தார். ஆவடியில் உடற்தகுதித் தேர்வு ஏற்பட்டது. இதில், அவருக்கு புள்ளிகள் குறைவாகக் கிடைத்ததால் மன வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தூங்கச் சென்ற ஹர்னிகா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News February 6, 2026

பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

சதுரங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(37). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு திருவள்ளூரில் இருந்து தேவேந்திரன், பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புல்லரம்பாக்கத்தில் எதிரே வந்த வினோத்(34) ஓட்டி வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!