News April 2, 2024

வீடு புகுந்து 9 சவரன் நகை திருட்டு

image

பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன. இவர் வயலுக்குச் சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது. இது குறித்து அவர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

Similar News

News August 15, 2025

தாம்பரம் மாநகராட்சியில் 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்

image

தாம்பரம் மாநகராட்சியில் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, 5 மண்டலங்களில் பணியாற்றும் மேலாளர், கண்காணிப்பாளர்கள், நிர்வாக அலுவலர், உதவியாளர்கள், இளநிலை & வருவாய் உதவியாளர்கள், பதிவு எழுத்தர் உள்ளிட்ட 19 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே முரளி மற்றும் ரமேஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 15, 2025

நடுவானில் விமானத்தில் கோளாறு

image

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று (ஆக.14) 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது இதையடுத்து அவசர அவசரமாக விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நள்ளிரவு 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தற்போது விமானத்தின் கோளாறு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை விமானம் கோழிக்கோடு புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

News August 15, 2025

ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில்கள் இயங்கும்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 15) சென்னை மற்றும் செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன. இதனால், வழக்கமான நாட்களை விட 40% ரயில்கள் குறைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை இதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!