News December 5, 2025
வீடு தேடி வரும் ஐயப்ப பிரசாதம்! எப்படி வாங்குவது?

வீட்டில் இருந்தே அரவணை பாயாசம் பெறுவதற்கான ஏற்பாட்டை சபரிமலையில் உள்ள தபால் அலுவலகம் செய்துள்ளது. வீட்டருகே உள்ள தபால் நிலையத்தில், இதற்கான பணத்தை கட்டினால், சில தினங்களில் பிரசாதம் வீடு தேடி வரும். ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ₹520 செலுத்த வேண்டும். இதில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி & அர்ச்சனை பிரசாதம் இருக்கும். 4 டின்னுக்கு ₹960 & 10 டின்னுக்கு ₹1,760 செலுத்த வேண்டும்.
Similar News
News December 6, 2025
BREAKING: தமிழ்நாட்டில் நள்ளிரவில் பயங்கர விபத்து

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கீழக்கரை அருகே ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்கள் சென்ற கார், எதிரே வந்த கார் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து விபத்து நிகழ்வது குறிப்பிடத்தக்கது
News December 6, 2025
அகண்டா 2 ரிலீஸ் ஆகாததற்கு இதுதான் காரணமா?

பாலையா ஃபேன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த அகண்டா 2 வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்த 14 ரீல்ஸ் நிறுவனம், முந்தைய பட தயாரிப்புகள் காரணமாக ஈரோஸ் நிறுவனத்துக்கு ₹28 கோடி செலுத்த வேண்டும் என பேசப்படுகிறது. இதை கொடுக்காததால் படத்தை தடைசெய்யக்கோரி ஈரோஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னையை தீர்த்து வருவதாக 14 ரீல்ஸ் கூறியதால், படம் டிச.20-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 6, 2025
முருகரும் ராமரும் எங்கள் பக்கம் தான்: RS பாரதி

பார்லிமெண்ட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் மீதான விவாதத்தில் எல்.முருகன், தமிழக அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், முருகன் என்று பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் முருகன் ஆகிவிட முடியாது என RS பாரதி விமர்சித்துள்ளார். மேலும் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகளில் எல்லாம் திமுக தான் வெற்றி பெற்றது என்ற அவர், முருகனும் எங்கள் பக்கம் தான், ராமரும் எங்கள் பக்கம் தான் என கூறினார்.


