News October 12, 2025
வீடு கட்ட புதிய RULES – நெல்லை மாநகராட்சி

நெல்லை மாநகர எல்லைப் பகுதியில் மாசு ஏற்படுவதை தடுக்கவும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்யவும் இனி புதிய வீட்டுமனைகள் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் பெற விண்ணப்பிக்கும் போது அந்த இடத்தில் மரக்கன்று ஒன்றை நடவு செய்து அதற்கான புகைப்படத்தையும் எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News October 12, 2025
திருநெல்வேலி மாவட்ட பெற்றோர்கள் மறந்துவிடாதீர்கள்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று (அக்.12) நடைபெறுகிறது. நாளை காலை 9.15 மணிக்கு பாளையங்கோட்டை காவலர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பார்வையிட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். *ஷேர் பண்ணுங்க
News October 12, 2025
நாளை டிஆர்பி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டிஆர்பி தேர்வு நாளை நெல்லையில் 18 மையங்களில் நடைபெற இருக்கிறது. 70 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5527 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்கு காலை 9. 30 மணிக்குள் சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அறிவித்துள்ளார்.
News October 12, 2025
நெல்லை: போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் துவக்கம்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை (அக் 12) நடைபெறுகிறது. நாளை காலை 9.15 மணிக்கு பாளையங்கோட்டை காவலர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பார்வையிட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.