News March 31, 2025
விஷம் குடித்து தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் அல்லி (55). குடிபழக்கம் கொண்ட இவர் நேற்றைய தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரின் மனைவி குமாரி கண்டிக்க, இதில் விரக்தி அடைந்த அல்லி நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அவரை மீட்ட உறவினர்கள் தர்மபுரி மருத்துவமறையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News February 1, 2026
தருமபுரி: மாணவிக்கு தாலி கட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு!

தருமபுரி நல்லம்பள்ளி அருகே, கல்லூரிக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 19 வயது மாணவிக்கு, அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் (25) திடீரெனத் தாலி கட்ட முயன்றார். அதிர்ச்சியடைந்த மாணவி தடுத்துப் போராடி கூச்சலிட்டதால், வாலிபர் அந்த ‘கவரிங்’ தாலியை மாணவி முகத்தில் வீசிவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News February 1, 2026
தருமபுரி தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே <
News February 1, 2026
தருமபுரி போலீசாரின் மின்னல் வேக வேட்டை – இருவர் கைது!

தருமபுரி மாவட்டம், பாளையம் அருகே கோம்பை கிராமத்தில், நேற்று (ஜன.31) சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வேலுசாமி, சிந்தாமணி ஆகியோரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


