News December 5, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்!

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும் *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது * எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்
Similar News
News March 3, 2026
NDA ஆட்சி அல்ல, அதிமுக ஆட்சி.. செல்லூர் ராஜூ

மதுரையில் PM மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பெரியார் படம் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை; மீடியாதான் அப்படி போட்டு இருக்காங்க என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதேபோல், NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என மோடியின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தார்.
News March 3, 2026
வங்கிக் கணக்கில் ரூ.8,000 வந்தது.. இன்ப அதிர்ச்சி

முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல்-ஜூன் காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக 1,62,900 மீனவ குடும்பங்களுக்கு ₹8000 வரவு வைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பசுந்தேயிலை கிலோவுக்கு 2 ரூபாய் ஆதார விலை என ₹8.53 கோடி நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்

ஸ்டாலினை ப.சி சந்தித்தபின், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு இன்று இறுதியாகும் என்று காங்., மூத்த தலைவர் கோபண்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவை எதிா்த்து ஒரு கருத்து கூட சொல்ல துணிவற்ற கட்சி தவெக; அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தற்கொலை சமம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை எதிர்க்க அஞ்சும் தவெகவுடன் காங்., எப்படி கூட்டணி அமைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.


