News March 6, 2025

விவேகானந்தர் பாறைக்கு செல்ல 3 புதிய படகுகள் -அமைச்சர் 

image

குமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். தற்போது அங்கு 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட மூன்று புதிய படகுகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னையில் நேற்று சென்னையில் தெரிவித்தார்.

Similar News

News March 6, 2025

குமரி மாவட்டத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண்

image

குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மூன்று பேருந்துகளின் படங்களுடன் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய பேருந்துகள் மாற்றிவிட்டு புதிய பேருந்துகளுக்கு பழைய பேருந்துகளின் எண்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. *இது குறித்த உங்கள் கருத்தை ஜாலியா கமெண்ட்ல சொல்லுங்க*

News March 6, 2025

தேசிய அளவில் குமரி மாணவிகள் சாதனை!

image

கன்னியாகுமரி மாவட்டம், கோவளம் பகுதியை சேர்ந்த மாணவிகள் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் குழு படகு ஓட்டுதல் போட்டியில்(Asmita rowing league) வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். அவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News March 6, 2025

குமரியில் 263 மாணவர்கள் +1 தேர்வு எழுதவில்லை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று +1 தேர்வு தொடங்கியது. 22 ஆயிரத்து 15 மாணவ மாணவிகள் தேர்வு எழுத பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு விபரங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், 22 ஆயிரத்து 38 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 263 தேர்வு எழுதவில்லை. அவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!