News December 13, 2025
விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். இதில் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாவிட்டால் 22வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணபிக்குமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தல்.
Similar News
News December 15, 2025
தேனி: வீட்டில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராணி (69). இவர் நேற்று முன்தினம் பாத்ரூம் சென்ற பொழுது அங்கு வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று (டிச.14) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 15, 2025
தேனி: மனைவியின் தங்கையை தாக்கிய கணவர் கைது

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பூமாதா. இவரது அக்கா கோமதாவின் கணவரான சுரேஷ் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இதுகுறித்து பூமாதா கேட்ட நிலையில் சுரேஷ் அவரை சரமாரியாக தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை நேற்று (டிச.14) கைது செய்தனர்.
News December 15, 2025
தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


