News March 30, 2024

விவசாயி வீட்டில் கொள்ளை: இரண்டு பெண்கள் கைது

image

வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மெய்யப்பன் வீட்டில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த வீட்டில் பின்பக்க கதவை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நேற்று  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தை சேர்ந்த கல்பனா, காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்களை நகை திருடிய வழக்கில் தெள்ளார் போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News February 16, 2026

தி.மலை அருகே மாணவர்கள் துடித்து துடித்து பலி

image

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே வீடி இடிந்து விழுந்ததில் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இளங்காட்டில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தாத்தாவின் வீட்டு சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரு சகோதர்கள் மீது சுவர்கள் இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News February 16, 2026

தி.மலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

image

தி.மலையை சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோரின் உறவினர் வீட்டில் தங்கி குடியாத்தத்தில் உள்ள பள்ளியில் 9th படித்து வந்துள்ளார். பெற்றோரை பார்ப்பதற்காக தி.மலைக்கு வந்தபோது வயிற்றுவலியின் காரணமாக தி.மலை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் குடியாத்தம் கமலேஷை (23) கைது செய்த நிலையில் தப்பி ஓட்டிவிட்டார். போலீசார் தேடி வருகின்றனர்

News February 16, 2026

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!