News December 10, 2024
விவசாயிக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே திருக்குறுங்குடி கீழூரை சேர்ந்த விவசாயி ஆனந்தராஜுக்கும் லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட முன் பகை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நடராஜனும் அவரது மகனும் சேர்ந்து ஆனந்தராஜை அரிவாளை கொண்டு நேற்று தாக்கினர்.இது குறித்து ஆனந்தராஜ் களக்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
BREAKING: நள்ளிரவில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மேலப்பாளையம் மேல கருங்குளத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி அருள்தாஸ், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று இரவு மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணென்ணையை பறிமுதல் செய்தனர். எங்கள் ஊரில் சாதி ரீதியாக எங்கள் குடும்பத்தை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர் என அருள்தாஸ் போலீசாரிடம் கூறினார்.
News August 21, 2025
பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
News August 20, 2025
நெல்லையில் அரசு பள்ளி மாணவனின் சாதனை

திருநெல்வேலி அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் மணிகண்டன், 7.5% இட ஒதுக்கீடு இல்லாமல், நீட் தேர்வில் 522 மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தனது சொந்த முயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டின் ஒரே மாணவர் இவரே. இவரின் இந்த வெற்றி, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.