News September 23, 2025
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். இதில் விவசாயிகள் விவசாய நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23)நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.
News September 23, 2025
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் காந்தி தரிசனம்

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை
ஆர்.காந்தி இன்று திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா,
ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம் பொதுக்குழு உறுப்பினர் PK.பொன்னன்
பலர் கலந்து கொண்டனர்.
News September 22, 2025
தொடரும் போதை மாத்திரை பறிமுதல்: இருவர் கைது

அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் செப்டம்பர் 22ஆம் தேதி அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயிலில் சென்னையை சேர்ந்த அப்துல் ரஷீத், மஸ்தான் ஆகிய இருவரும் 550 போதை மாத்திரைகள் கடத்தி வருவது தெரிந்து கைது செய்தனர். நேற்று ஐந்து பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.