News March 24, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

வரும் மார்ச் 28- ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ. ஆ. ப. தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News November 5, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் அனைவரும் முன் செல்லும் வாகனத்துடன் குறைந்தது 10 மீட்டர் தூரம் விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான தூரம் பின்பற்றுவது விபத்துகளை தவிர்க்கும் முக்கிய வழிமுறையாகும் எனவும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
News November 5, 2025
சேலம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)


