News October 25, 2024
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மானாவரி நிலங்களில் விவசாய பணிகள் துவங்கியுள்ளதால் பயிர்களுக்கு அடி உரமாக போடப்படும் டிஏபி உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Similar News
News February 25, 2026
வேலையில்லா இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று நாட்கள் பயிற்சி வரும் 28ஆம் தேதி புதுகிராமத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்த இருபாலரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2026
இ.எஸ்.ஐ வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற கூட்டு விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ காப்பீடாளர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 25, 2026
தூத்துக்குடி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


