News April 20, 2025
விவசாயிகள் குறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறித்த கூட்டம் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை, வணிகம், வனத்துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்ளனர். விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., இன்று (அக்.15) கோடம்பாக்கம் ஊராட்சியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இச்சங்கத்தில் வழங்கப்பட்ட விவசாய கடன், நகை கடன், தனிநபர் கடன் குறித்த பதிவேடுகளையும், கடன் வசூலிக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
News October 15, 2025
பள்ளியில் மரக்கன்று நடவு செய்த ஆட்சியர் சந்திரகலா

இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா இன்று (அக்.15) காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கர்ணாவூர் ஊராட்சி வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நட்டார்கள். உடன் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன், முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா (பொறுப்பு), மாவட்ட கல்வி அலுவலர் கிளாடி சுகுணா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் கலந்து கொண்டனர்.
News October 15, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை நிலவரம்

இன்று (அக் -15) ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 172.2மி.மீ மழை பதிவாகியுள்ளது இதில் அதிகபட்சமாக வாலாஜா சுற்றுவட்டார பகுதிகளில் 43.4மி.மீ மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியாக 16.11மி. மீ மழை பதிவாகியுள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் செய்தியை வெளியிட்டுள்ளது.