News November 19, 2025
விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி வழக்கும் PM மோடி

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறும் வேளான் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து பி.எம். கிசான் திட்டத்தின், 21-வது தவணையான ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்குகிறார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.
Similar News
News November 19, 2025
43 தலைவர்களுக்கு காங்., ஷோகாஸ் நோட்டீஸ்

பிஹாரில் தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, Ex அமைச்சர்கள் உட்பட 43 மூத்த தலைவர்களுக்கு காங்கிரஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதற்குள் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால், கட்சியில் இருந்து நீக்கம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
News November 19, 2025
கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறையா?

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விட வாய்ப்புள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பை ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
News November 19, 2025
விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டவர்: அப்பாவு

SIR-க்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் வெறும் கண்துடைப்பு என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். உண்மையில் SIR எதிர்ப்பதாக இருந்தால் விஜய் SC-ல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்று பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இணைவார்கள் எனவும் கூறியுள்ளார். SIR-க்கு எதிராக விஜய் போட்ட வீடியோவில் மத்திய அரசை விமர்சிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.


