News July 10, 2025
விவசாயிகளுக்கு விரைவில் நெல்லுக்கான தொகை கிடைக்கும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கிற்கு வராத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4ஆம் தளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை, அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என்று கலெக்டர் ஜெ. யூ. சந்திரகலா அறிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் நெல்லுக்கான தொகை விரைவில் கிடைக்க வழிவகுக்க செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வருகின்ற ஜூலை 19 சனி காலை 8:30 முதல் மாலை 3 மணி வரை தென்கடப்பந்தாங்கலில் உள்ள, ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு இந்த (9488466468, 9952493516) எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,03,025டன் நெல் கொள்முதல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 2025 முதல் ஜூன் 2025 வரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடங்கப்பட்டு. 16, 249 விவசாயிகளிடம் இருந்து ரூ.251.986 கோடி மதிப்பிலான, 1,03,025டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு (9445030523). எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!