News April 2, 2025
விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்காசி மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லினை அரசு நிர்ணயித்த விலையில் இடைத்தரகர்கள் இன்றி அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளார். அதற்குரிய தொகையினை நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
தென்காசி வருகிறார் முதல்வர்

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் திமுக கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்காசி மக்களே உங்க பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் போன்ற குறைகள் இருந்தால் முதல்வரிடம் மனு அளிக்க தயாராகுங்க.மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News September 17, 2025
சங்கரன்கோவில் பகுதியில் மின்தடை அறிவிப்பு

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் திரு. மா.பாலசுப்ரமணியம் அவர்களின் செய்தி குறிப்பு நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் வரும் 18.09.2025 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்று பெரியகோவிலான்குளம். சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம். சில்லிகுளம் சூரங்குடி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News September 16, 2025
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை மாவட்ட அளவிலான (ம) மண்டல அளவிலான போட்டிகள் பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பொது மக்கள் பிரிவு, அரசு ஊழியர்கள் பிரிவு என ஐந்து பிரிவுகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா தென்காசி மாவட்ட விளையாட்டு மையத்தில் (செப்.18) காலை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.