News November 4, 2025
விவசாயிகளுக்கு அதிக யூரியா தந்துள்ளோம்: மத்திய அரசு

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
IMPORTANT: இத பண்ணலனா பான் கார்டு வேலை செய்யாது!

டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம் என UIDAI அறிவித்துள்ளது. இணைக்காவிட்டால் வரும்  ஜனவரி 1, 2026 முதல், பான் கார்டு வேலை செய்யாது என எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், புதிதாக பான் கார்டு வாங்குபவர்களுக்கு ஆதார் தானாகவே இணைக்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதாரை பான் கார்டுடன் இணைக்க, <
News November 4, 2025
கோவை சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை உறுதி: CM

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனித தன்மையற்றது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூர குற்றச்செயல்களை கண்டிக்க எந்த கடுஞ்சொல்லும் போதாது என்று கூறியுள்ள அவர், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத்தர, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 4, 2025
பரபரக்கும் IPL Trade.. போட்டி போடும் அணிகள்!

வரும் 2026-ம் ஆண்டுக்கான IPL வீரர்கள் Trade-ல் இந்த மூன்று மாற்றங்கள் நிகழ, அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. வெளியாகி வரும் செய்திகளின் படி, ★GT அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், CSK அணிக்கு மாறலாம் ★DC அணியின் KL ராகுல், KKR அணியில் மாறக்கூடும் ★RR கேப்டன் சஞ்சு சாம்சன், DC-க்கு இணையலாம். டிசம்பர் மாதத்திற்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


