News February 4, 2026

விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

Similar News

News February 6, 2026

விழுப்புரம்: மனைவி திட்டியதால் தற்கொலை!

image

பள்ளியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்(28). விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஷகிலா(27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று குடி போதையில் வந்த தமிழரசனுக்கும் மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த தமிழரசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News February 6, 2026

விழுப்புரத்தில் நாளை மின் தடை!

image

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.7) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திரு.வி.க. ரோடு, கணபதி நகர், குருசாமி பிள்ளை தெரு, பழைய கோர்ட் ரோடு, பூந்தோட்டம், கே.கே.ரோடு, நேருஜி ரோடு, எம்.ஜி.ரோடு, பாகர்ஷா தெரு, வி.மருதூர், ஆறுமுகம் லே-அவுட், கந்தசாமி லே-அவுட், பார்த்தசாரதி லே-அவுட், சந்தான கோபாலபுரம், சங்கரமடத் தெரு, காமராஜர் தெரு, நகர் ஆகிய பகுதிகளில் மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2026

விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த நங்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவருக்கும் முட்டத்தூரைச் சேர்ந்த வாணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், வாணியை அவரது தாயாரிடம் பேச, பார்க்க செல்ல சின்னையன் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வாணி, நேற்று முன் தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!